இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பரவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் பால்ராஜ்(25). இவர், 9.2.2016 அன்று, இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற மனவளர்ச்சி குன்றிய 26 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பால்ராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து பால்ராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in