திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்களில் விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் சிவன் அருள் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பரவல் காரணமாகவும், ஒரே இடத்தில் விவசாயிகள் ஒன்றுசேருவதை தடுக்கும் வகையில், விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டம் 4 இடங்களில் பிரித்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பத்தூர், கந்திலி பகுதியைச் சேர்ந்தவர் களுக்கு ஆதியூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தி லும், ஜோலார்பேட்டை, நாட் றாம்பள்ளியைச் சேர்ந்தவர் களுக்கு நாட்றாம்பள்ளி வேளாண் விரிவாக்கம் மையத்திலும், ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வாணியம்பாடி விரிவாக்க மையத்திலும், மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மாதனூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலும் நாளை (18-ம்தேதி) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்வுக்கூட்டம் நடைபெறுகின்றன." என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in