தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ந்த ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டல்

தொட்டில் குழந்தை திட்டத்தில்  சேர்ந்த ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டல்
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைக்கு ‘சிவா’ என ஆட்சியர் சந்தீப் நந்தூரி பெயர் சூட்டினார்.

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி சமூக நலத்துறை சார்பில் தொட்டில் குழந்தை திட்டத்தில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண் குழந்தைக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ‘சிவா’ என்று பெயர் சூட்டினார். பின்னர், குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அப்போது, மாவட்ட சமூக நலத்திட்ட அலுவலர் (பொறுப்பு) கந்தன் மற்றும் குழந்தைகள் நல குழும அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in