பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மூலம், இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு கொடிவேரி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனங்களுக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக பெய்த மழையால், அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்து வருகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நீரின் அளவு 2300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.12 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2357 கன அடி நீர் வரத்து இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in