சுடுகஞ்சியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

சுடுகஞ்சியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த இருமரம் கிராமத்தில் வசிப்பவர் சுதாகர். இவரது மகன் தஷ்வந்த்(2). இவர், கடந்த 5-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது சாதம் வடித்த சுடுகஞ்சியில் தவறி விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலை யில் மீட்கப்பட்ட குழந்தையை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தஷ்வந்த் உயிரிழந்துள்ளார். இது குறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in