மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து  பெண் உயிரிழப்பு
Updated on
1 min read

சேலத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.

சேலம் கொண்டலாம்பட்டி நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி கவிதா (38). இவர் நேற்று முன் தினம் மாலை குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in