

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்கு நேற்று நடைபெற்ற எழுத் துத் தேர்வில் விருதுநகர் மாவட் டத்தில் 20,817 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலைக் காவலர், சிறைக் காவலர் தீயணைப்பு வீரர் பணிக்கான எழுத்துத் தேர்வு, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 14 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு 23,009 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர் களில் 20,817 பேர் பங்கேற்று நேற்று தேர்வு எழுதினர். 2,192 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்ப சோதனை செய்யப்பட்ட பின் தேர்வறைக்குள் அனுமதிக் கப்பட்டனர். தேர்வு மையங்களில் மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், எஸ்.பி. பெருமாள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல்
ராமநாதபுரம்
தேர்வுக்கு 1317 ஆண்கள், 254 பெண்கள் வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ. கார்த்திக் பார்வையிட்டார்.
மதுரையில்...