ஆரணியில் ரூ.2.71 கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

ஆரணி  சைதாப்பேட்டையில் ரூ.2.71 கோடியில் சாலை திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்.
ஆரணி சைதாப்பேட்டையில் ரூ.2.71 கோடியில் சாலை திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்.
Updated on
1 min read

வண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டையில் ரூ.2.71 கோடியில் தார்ச்சாலை, சிமென்ட் சாலை உள்ளிட்ட சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். சாலைப் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில், செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் ராஜ விஜய காமராஜ், மாவட்ட ஆவின் துணைத் தலைவர் பாபு, நகரச் செயலாளர் அசோக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் சங்கர், சேகர், கஜேந்திரன், திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவர் பச்சையம்மான் சீனுவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in