

மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம்(50). இவரது மனைவி அஞ்சனாதேவி(44). மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேலாயுதம் அஞ்சனாதேவி மீது கிரைண்டர் கல்லால் தாக்கினார். இதில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேலாயுதத்தை நேற்று கைது செய்தனர்.