போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் ஊர்மேல்அழகியான் கிராமத்தைச் சேர்ந்த பால் தினகரன் (37) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இலத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நிஷாந்த் மற்றும் போலீஸ்காரர் சக்திவேல் ஆகியோர் பால் தினகரனை விசாரிக்க ஊர்மேல் அழகியான் கிராமத்துக்கு சென்றனர்.

அப்போது, தன்னை பிடிக்க முயன்ற சக்திவேலை அரிவாளால் வெட்டிவிட்டு பால் தினகரன் தப்பிச் சென்றுவிட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாம்பவர் வடகரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in