திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள் முடிவு

திருநெல்வேலி  ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள் முடிவு
Updated on
1 min read

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (14-ம் தேதி) காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் திருநெல்வேலி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பி.பெரும்படையார் தெரி வித்தார்.

அவர் கூறியதாவது: விவசாயி களுக்கு எதிரான வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை தடுக்கும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் 14-ம்தேதி காலை 10 மணிக்கு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களும் பங்கேற்கின்றன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in