பிச்சை எடுத்த 4 பேர் மீட்பு

பிச்சை எடுத்த 4 பேர் மீட்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் அறிவுரைப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மேற்பார்வையில், குழந்தைகள் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் பெருமாநல்லூர், குன்னத்தூர் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் முன் கோயிலுக்கு வருபவர்களிடம் யாசகம் வாங்கிக் கொண்டிருந்த 3 பெண்கள், ஆண் உட்பட 4 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் நால்வரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்பதும், கணக்கம்பாளையம் சாலையோர பகுதியில் வசித்து வருபவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, பெரியார் காலனியில் உள்ள யுனிவர்சல் காப்பகத்தில் 3 பெண்களும், அவிநாசி அம்மாபாளையத்தில் உள்ள மரியாலயா காப்பகத்தில் ஆணும் சேர்க்கப்பட்டனர்.

இப்பணியில் ஈடுபட்ட போலீஸாரை, காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in