சீருடைப் பணியாளர் தேர்வு நாளை நடைபெறுகிறது விழுப்புரம் மாவட்ட எஸ்பி தகவல்

சீருடைப் பணியாளர் தேர்வு நாளை நடைபெறுகிறது விழுப்புரம் மாவட்ட எஸ்பி தகவல்
Updated on
1 min read

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 10,906 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை (13ம் தேதி) நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 தேர்வு மையங்களில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24,166 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 8 மணிக்கு முன்பாக மையங்களில் இருக்க வேண்டும்.

தேர்வு எழுத வரும்போது அழைப்பு கடிதம், பந்துமுனை பேனா, தேர்வு எழுதும் அட்டை கொண்டு வர வேண்டும். கைப்பேசி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தேர்வு மையங் களுக்கு கொண்டு வரக்கூடாது. முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in