விழுப்புரம் மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில்  6 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் 6 இன்ஸ் பெக்டர்கள் பணியிட மாற்றம் செய் யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூங் கோதை விழுப்புரம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கும், விழுப்புரம் மாவட்டம் ரோஷணை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த காமராஜ் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர்களான ஜே.விஜி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், வள்ளி ரோஷணை காவல் நிலை யத்திற்கும், ஜி.விஜி சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கும், குமார் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் பிறப்பித்துள்ளார்.

சப் - இன்ஸ்பெக்டர்கள்

பணியிட மாற்றம்

செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கும், விழுப்புரம் மேற்கு காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கும், கஞ்சனூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நல்லாண்பிள்ளை பெற் றாள் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in