ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

ஆற்றில் விழுந்து உயிரிழந்த இளைஞர் மோகன்ராஜ்.
ஆற்றில் விழுந்து உயிரிழந்த இளைஞர் மோகன்ராஜ்.
Updated on
1 min read

சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தகோவிந்தராஜ் என்பவர் தனதுகுடும்பத்துடன் நேற்று சித்தலூரில் உள்ள பெரியாயி கோயிலுக்கு சென்றுள்ளார். தனியார் கல்லூரி யில் இளங்கலை முதலாமாண்டு பயின்று வரும் அவரது மகன் மோகன்ராஜ் (19) கோயிலுக்கு அருகே உள்ள ஆற்றில் தண்ணீர்வருவதை வேடிக்கை பார்க்கச் சென்றார். அப்போது அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அக் கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்ட போது மோகன்ராஜ் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். நெடுநேர மாகியும் ஆம்புலன்ஸ் வராததால்ஆத்திரமடைந்த பொதுமக்கள் வரஞ்சரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வரஞ்சரம் காவல்துறையினர் பிரே தத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in