வானூர் அருகே ஏரியில் மூழ்கி இளைஞர் மாயம்

வானூர் அருகே ஏரியில் மூழ்கி இளைஞர் மாயம்
Updated on
1 min read

வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையை சேர்ந்தவர் ராஜ சேகர் (28). இவர் தன் நண்பர் ஜெகநாதனுடன் இரண்டு ஆயில் பேரல்களை இணைத்து, அதன் மேல் மரப்பலகையை வைத்து படகு போல உருவாக்கினார்.

நேற்று பிற்பகல் அங்குள்ள ஏரியில் இதனை இயக்கிய போது, அந்தப் படகு கவிழ்ந்து ராஜசேகர் தண்ணீரில் மூழ்கினார். உடன் சென்றஜெகன் நீந்தி கரையேறி வானூர்தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரி வித்தார். தீயணைப்புத்துறையினர் ஏரியில் மூழ்கிய ராஜசேகரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in