பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் காவலர் உட்பட 8 பேர் மீது வழக்கு

பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் காவலர் உட்பட 8 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டை கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் மாரியப்பன்(34). ஊட்டியில் காவலராகப் பணிபுரிகிறார். இவருக்கும், விருதுநகர் லட்சுமி நகரைச்சேர்ந்த உமாமகேஸ்வரி(29) என்பவருக்கும் கடந்த அக். 30-ல் திருமணம் நடந்தது. அப்போது, 22 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாரியப்ப னுக்கும், குறிஞ்சாக்குளத்தைச் சேர்ந்த ஜெயராணிக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்துள்ள தாக உமாமகேஸ்வரிக்கு அண்மையில் தெரிய வந்தது. அவரது புகாரின் பேரில் காவலர் மாரியப்பன், அவரது சகோதரர்கள் மகேந்திரன், சந்திரசேகரன், தந்தை பரமசிவன் உட்பட 8 பேர் மீது விருதுநகர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in