விவசாயிகளுக்கு ஆதரவாக பெருந்துறையில் ஏர் கலப்பையுடன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஏர் கலப்பையுடன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஏர் கலப்பையுடன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

பெருந்துறையில் காங்கிரஸ் நடத்திய ஏர் கலப்பை பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்ததையடுத்து, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர் கலப்பை பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏர் கலப்பையுடன் குவிந்தனர். பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும், நடிகருமான விஜய் வசந்த், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த், முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, திருப்பூர் மாவட்ட தலைவர்கள் கோபி, தென்னரசு, கிருஷ்ணன், கோவை மாவட்ட தலைவர் மனோகரன், நாமக்கல் மாவட்ட தலைவர் தனபால், வட்டாரத்தலைவர்கள் பெருந்துறை ராவுத் குமார், ஆண்ட முத்துசாமி, சண்முகம், மொடக்குறிச்சி முத்துக்குமார், கொடுமுடி கோபாலகிருஷ்ணன், ஊத்துக்குளி சர்வேஸ்வரன், பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஏர் கலப்பையை கையில் ஏந்தியவாறு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in