கூட்டுறவு நகரில் ஊராட்சி பூங்காவை திறக்க வலியுறுத்தல்

கூட்டுறவு நகரில் ஊராட்சி பூங்காவை திறக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

திருப்பூர் அருகே ஆத்துப்பாளையம் கிளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசனிடம் அளித்த மனுவில், "கரோனா பொது முடக்க தளர்வுகளையடுத்து, விளையாட்டு பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை திறக்க கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஆத்துப்பாளையம் எல்லைக்கு உட்பட்ட கூட்டுறவு நகரிலுள்ள ஊராட்சி பூங்கா, உடற்பயிற்சி நிலையத்தை உடனடியாக திறக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in