

இந்த பட்டாலியன் பிரிவின் துணைத் தளவாய் முருகேசன், உதவி தளவாய்கள் ரவிச்சந்திரன், பாலசுப்ரமணியன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.மதுரை சட்டக் கல்லூரி விரிவுரையாளர் சிவக்குமார், சக்தி விடியல் நிறுவன திட்ட இயக்குநர் ஜேசுதாஸ், மதுரை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சுரேஷ்குமார், சமூகப் பணியாளர் நிர்மலா சொரூபராணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
சமூகப் பணியாளர் அருள் குமார் நன்றி கூறினார். தமிழ்நாடு சிறப்புப் படையினர் பயிற்சி பெற்றனர்.