பாசனத்துக்கு வைகை தண்ணீர் திறக்காததை கண்டித்து மானாமதுரை அருகே கிராம மக்கள் மறியல்

கீழப்பசலை விலக்கு பகுதியில் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
கீழப்பசலை விலக்கு பகுதியில் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated on
1 min read

மானாமதுரை அருகே பாசனத் துக்காக வைகை தண்ணீர் திறக் காததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் போக் குவரத்து பாதிக்கப்பட்டது.

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டப் பாசனத் துக்காக டிச.8-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. தண்ணீர் சிவகங்கை மாவட்டத்தை வந்தடைந்த நிலை யில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் முறைப்படி கால் வாய்களில் தண்ணீரை திறக்க வில்லை.

இதையடுத்து விவசாயிகள் ஆங்காங்கே தண்ணீரை மறித்து தங்கள் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் மானா மதுரை அருகே மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியான கீழப்பசலை கால்வாயில் தண்ணீர் செல்லவில்லை. இதனால் கீழப்பசலை, மேலப்பசலை, சங்கமங்கலம் ஆகிய பகுதிகளில் பல நூறு ஏக்கரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை யடுத்து தங்களது பகுதிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து இம்மூன்று கிராம மக்கள் கீழப்பசலை விலக்கு பகுதியில் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் நேற்று மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இவர்களிடம் பொதுப்பணித் துறை அதிகாரிகள், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தண்ணீர் திறப்பதாக அதி காரிகள் உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in