ரேஷன் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடக்கம்

ரேஷன் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு தொடக்கம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவுத் துறை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் சார்பில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 65 ரேஷன் கடை பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 23-ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. தினமும் 700 பேர் வீதம் 8 ஆயிரத்து 135 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் மற்றும் தலைவர் சந்தானம், ஓசூர் துணைப் பதிவாளர் சுந்தரம், கிருஷ்ணகிரி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க துணைப் பதிவாளர் சரவணன், கிருஷ்ணகிரி சரக துணைப் பதிவாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் நேர் முகத் தேர்வு நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in