சிறுவனை மீட்கும் பணி கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு

சிறுவனை மீட்கும் பணி கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு
Updated on
1 min read

கருணாபுரம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கை காண சென்றகருணாபுரத்தைச் சேர்ந்த ராமு மகன் அஸ்வந்த்(15) வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமா னார்.

சிறுவனைக் கண்டுபிடிப்பதில் மாவட்ட நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை எனக் கூறி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தி்ல் ஈடுபட் டனர்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கிரண்குரலா, சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினரை சந்தித்து நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் சிறுவனின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in