மத்திய அரசு எஸ்சி/எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் எனக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநகர் மாவட்டச் செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார். மதுரை தொகுதி செயலாளர் ரா.பாண்டியம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.