

இந்நிலையில் வைகை ஆற்றில் மதுரை எல்ஐசி பாலம் முன்பாக சிறிது தூரத்தில் நேற்று காலை இரு சிறுமிகளின் உடல்கள் கரை ஒதுங்கின. இதை அறிந்த போலீஸார் உடல்களை மீட்டு விசாரித்தனர். இவர்கள் முருகனின் மகள்கள் என அடையாளம் தெரிந்தது. தாய் திட்டியதால் விரக்தியில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்தார்களா அல்லது வேறு காரணமா என கரிமேடு, செல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த இரு சிறுமிகளும் ஏற்கெனவே ஒருமுறை மாயமாகி, தோழி ஒருவரின் வீட்டில் இருந்து மீட்டு வரப்பட்டனர். இருப்பினும் சுதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருந்ததாகவும், அவரது பேச்சைக் கேட்டு சுஜி தண்ணீருக்குள் குதித்திருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்தனர்.