விவசாயிகளுக்கு எதிராக முதல்வர் செயல்பட மாட்டார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி

விவசாயிகளுக்கு எதிராக முதல்வர் செயல்பட மாட்டார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி
Updated on
1 min read

விவசாயிகளுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி எப்போதும் செயல்பட மாட்டார் என பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரையும், ஜெயலலிதாவையும் அவதூறாக விமர்சிப்பதைக் கண்டிக்கிறோம். ஒரு அறையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்பவர் ஸ்டாலின்.

முதல்வர் பழனிசாமியைப் பற்றி பேச ராசாவுக்கு என்ன தகுதி உள்ளது?. முதல்வர் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை அகற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் அவதூறாகப் பேசி வருகிறார். முதல்வரின் அறிவிப்பால் அரசு பள்ளியில் படித்த 413 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி எப்போதும் செயல்பட மாட்டார். தமிழகத்தின் உரிமைக்காக பல நேரம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துப் பெற்றவர் முதல்வர் பழனிசாமி. உரிமைகளைப் போராடி பெற்றுக் கொடுப்பவர் முதல்வர் பழனிசாமி.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in