நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த 8 பேர் கைது

நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த 8 பேர் கைது
Updated on
1 min read

நிலத்தகராறு காரணமாக விவசாயியைக் கொலை செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வைத்தியநாதபுரம் பகுதியில், கடந்த நவம்பர் மாதம் எண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதன் (55) கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கடம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கொங்காடை கிராமத்தைச் சேர்ந்த சித்தன் (56), சித்தலிங்கம் (30), ரங்கன் (55), நாகதம்படி (45), கணேஷ் தம்படி (30), முருக தம்படி (38), கர்நாடக மாநிலம் சூலகொம்பை கிராமத்தைச் சேர்ந்த மாதேவா (40), சித்தன் (29) ஆகியோருக்கு தொடர்புள்ளது தெரியவந்தது. நிலத்தகராறு காரணமாக இந்த கொலைச்சம்பவம் நடந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து 8 பேரையும் கடம்பூர் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in