புகையிலைப் பொருட்கள் விற்ற 4 பேர் போலீஸாரல் கைது

புகையிலைப் பொருட்கள் விற்ற 4 பேர் போலீஸாரல் கைது
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டதில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஜிங்கலூரைச் சேர்ந்த ஏலகி(28), பாகலூர் அடுத்த பேரிகையைச் சேர்ந்த நாராயணன்(53), போச்சம்பள்ளி அடுத்த மேக்லாம்பட்டியைச் சேர்ந்த சீதாராமன்(36), ஆவத்தவாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன்(55) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in