அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு தீவிரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை சோதனையிட்ட காவல் துறையினர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை சோதனையிட்ட காவல் துறையினர்.
Updated on
1 min read

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத் தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை காவல் துறையினர் சோதனையிட்டு அனுமதித்தனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனால், தி.மலை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அதேபோல், அண்ணாமலை யார் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத் தப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் அவர்களது உடமை களும் சோதனை செய்யப்பட்டது. ரயில்கள் இயக்கப்படவில்லை என்றாலும், ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் கண்காணித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in