விழுப்புரத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின்  4-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரத்தில்  மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் கொட்டும் மழையில் அதிமுகவினர் நினைவஞ்சலி நடத்தினர்.

விழுப்புரம் மாதா கோயில், வள்ளலார் அருள் மாளிகையில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பசுபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் சிவி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்திரனராக பங்கேற்று ஏழை, எளியோருக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் தர் தலைமையில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதே போல மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ராமதாஸ், விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் தனித்தனியே ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in