டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தருமபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, ஓசூரில் திமுக சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தருமபுரி நகரில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் தருமபுரி எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மக்களவை உறுப்பினர் தாமரைச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் விஸ்வநாதன், மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பென்னாகரம் எம்எல்ஏ இன்பசேகரன் தலைமையில் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மாதையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். ஓசூர் எம்எல்ஏ சத்யா கண்டன உரையாற்றினார்.

நாமக்கல்

திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார்.

ஈரோடு

மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரக்குமார் உள்பட கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in