கிருஷ்ணகிரியில் 12-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியில் 12-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் கலைமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் வரும் 12-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத் திலுள்ள உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதில், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிகள், தொழிலாளர் நலம் மற்றும் நிலுவையில் உள்ள சில பரஸ்பரம் பேசி முடித்துக் கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அன்றைய தினமே தீர்வு வழங்கப்பட உள்ளது. எனவே, இவ்வாய்ப்பை பொதுமக்களும், வழக்கறிஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரம் அறிய அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் இயங்கும் சட்டப்பணி அலுவலகத்தை அணுகலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in