நாமக்கல்லில் திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல்லில் திமுக செயற்குழுக் கூட்டம்
Updated on
1 min read

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார். மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ் மூர்த்தி பேசும்போது, டெல்லியில் மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவ தெரிவிக்கும் வகையில், திருச்செங்கோட்டில் இன்று (5-ம் தேதி) நடக்கும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். வாக்காளர் பட்டியில் சரிபார்ப்பு முகாமில் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்த கொள்ள வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் குமார், ஆதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் பரமானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in