

டெல்லி விவசாயிகள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சேலம், ஈரோடு, நாமக்கல்லில் மறியல் போராட்டம் நடந்தது.
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோட்டில் மறியல் போராட்டம் நடந்தது.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு நடந்த மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமை வகித்தனர். மறியலில் ஈடுபட்டோர் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின்பு விடுவித்தனர்.
நாமக்கல்லில் மறியல்
சேலத்தில் 70 பேர் கைது
இதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் கூடிய தொண்டர்கள், மத்திய வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்பது பெண்கள் உள்பட 70 பேரை டவுன் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.