விவசாய நிலத்துக்குள் புகுந்த யானைகள் வடகரை அருகே தென்னைகள் சேதம்

காட்டு யானைகளால் வேரோடு சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள்.
காட்டு யானைகளால் வேரோடு சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் வடகரை அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் கடந்த ஓராண்டாக காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. தென்னை, மா, வாழை, நெல் போன்ற பயிர்களையும், தண்ணீர் குழாய்கள், சோலார் வேலிகளையும் யானைகள் சேதப் படுத்துகின்றன. வடகரை அருகே உள்ள சென்னாப்பொத்தை, சீவலான்காடு, குறவன்காடு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக 2 யானைகள் முகாமிட்டுள்ளன. அங்குள்ள ஏராளமான தென்னை மரங்களை வேரோடு சாய்த் துள்ளன. இதனால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

100 மரங்கள் சாய்ப்பு

யானைகள் நடமாட்டத்தால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை. மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் 2 ஆண் யானைகள் விவசாயிகளை விரட்டுகின்றன. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வனத்துறையில் போதிய ஆட்கள் இல்லாததால் விவசாயிகளும் உடன் வருமாறு அழைக்கின்றனர்.

தீர்வு காண்பது அவசியம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in