வேலூர் மாவட்டத்தில் 11 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் எஸ்பி செல்வகுமார் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில்  11 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் எஸ்பி செல்வகுமார் உத்தரவு
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் 11 உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தர விட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர்கள் 11 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அடைப்புக்குறிக்குள் புதிய பணியிட விவரம்: வேலூர் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலை (அணைக்கட்டு) வேப்பங்குப்பம் உதவி ஆய்வாளர் நிவாசன் (விரிஞ்சிபுரம்), பேரணாம்பட்டு உதவி ஆய்வாளர் சிலம்பரசன் (காட்பாடி), வேலூர் வடக்கு சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளர் செல்வராஜ் (குடியாத்தம் நகரம்), வேலூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளர் முத்துசெல்வன் (திருவலம்), சத்துவாச்சாரி உதவி ஆய்வாளர் விக்னேஷ் (வேலூர் கிராமியம்), குடியாத் தம் நகரம் மணிகண்டன் (வேலூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு), விரிஞ்சிபுரம் உதவி ஆய்வாளர் சிவசந்திரன் (குடியாத்தம் கிராமியம்), வேப்பங்குப்பம் உதவி ஆய் வாளர் பிரகாசம் (பனமடங்கி), காட்பாடி உதவி ஆய்வாளர் ராஜசேகர் (வேலூர் வடக்கு சட்டம்-ஒழுங்கு), குடியாத்தம் கிராமிய காவல் நிலைய உதவி ஆய் வாளர் சிங்காரம் (பேரணாம்பட்டு) காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in