ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் அதிமுக அரசைதான் ஆதரிப்பார்கள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கருத்து

ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் அதிமுக அரசைதான் ஆதரிப்பார்கள்  உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கருத்து
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் புத்தாற்றின் குறுக்கே ராஜாக்களியிருப்பூர், மாப்பிள்ளைகுப்பத்தை இணைக்கும் வகையிலும், பூங்குளம், வாஞ்சியத்தை இணைக்கும் வகையிலும் தலா ரூ.1.47 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலங்களை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று திறந்துவைத்தார்.

பின்னர், அமைச்சர் ஆர்.காம ராஜ் கூறியது:

காவிரிப் பிரச்சினையில் சட்டப் போராட்டம் நடத்தியது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தாமல் தடுத்தது என விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வருவது அதிமுக அரசு. வேளாண் திருத்த சட்டங்களால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசியலுக்காக சிலர் விவசாயிகளை தூண்டிவிடு கின்றனர். மக்கள், அதிகாரிகள், மத்திய அரசு பாராட்டும் முதல்வராக நமது முதல்வர்பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதனால்தான் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பொய் வழக்குகளை தொடர்ந்து, அவருக்கு மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் திமுகவினர். தற்போது ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து ஸ்டாலின் உட்பட திமுகவினர் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். ஜெயலலிதாவின் மீது பாசம் வைத்தவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் அதிமுக அரசை மட்டும்தான் ஆதரிப்பார்கள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in