இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது

இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது
Updated on
1 min read

சங்கரன்கோவில் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோயின. சங்கரன்கோவில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வாகன சோத னையில் ஈடுபட்ட போலீஸார் சந்தேகத்துக்குரிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், ராஜபாளையம் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த ஜோதிமுத்து என்பதும், சங்கரன்கோவில் மற்றும் சிவகாசி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. ஜோதிமுத்துவை கைது செய்த போலீஸார், 11 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in