காட்பாடியில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

காட்பாடியில் அரசு ஊழியர்  வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
Updated on
1 min read

காட்பாடியில் அரசு ஊழியர் வீட்டில் 9 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் 2-வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி சங்கர் (48). வேலூரில் உள்ள வேளாண் அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், ஊரில் இருந்து குடும்பத்தினருடன் ரவிசங்கர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் ரவிசங்கர் புகாரளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் ஏதாவது பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in