வேலூர் சிறையில் 10-வது நாளாக முருகன் போராட்டம்

வேலூர் சிறையில் 10-வது நாளாக முருகன் போராட்டம்
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முருகன் தனக்கும், தனது மனைவி நளினிக்கும் பரோல் வழங்க வேண்டும். உறவினர்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 23-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் பழங்களை உட்கொண்டு வருவதாக சிறை அதிகாரிகள் கூறினர். முருகனின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 10-ம் நாளாக தொடர்ந்தது. அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in