முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை

முன்னாள் படைவீரர்களின்  சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை
Updated on
1 min read

தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் தொழிற்கல்வி பயிலும் சிறார்களுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2020-21-ம் ஆண்டுக்கு தொழிற்கல்வி படிப்புக்கு கல்வி உதவித்தொகையாக ஆண் பிள்ளைகளுக்கு ரூ.30 ஆயிரம், பெண் பிள்ளைகளுக்கு ரூ.36 ஆயிரம் இந்த ஆண்டு முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் தகுதியுள்ள சிறார்கள் இத்திட்டத்தின்கீழ் www.ksb.gov.in என்ற இணையதளம் வழியாக வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in