மக்களை பாதிக்கும் போராட்டம் பாமக நடத்துவது சரியா? அமமுக துணைப் பொதுச்செயலாளர் கேள்வி

மக்களை பாதிக்கும் போராட்டம் பாமக நடத்துவது சரியா? அமமுக துணைப் பொதுச்செயலாளர் கேள்வி
Updated on
1 min read

அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே பாமக போராட்டம் நடத்துவது நாடகம் போல் தெரிகிறது, என அமமுக துணைப்பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்துகொண்டு அவர்களிடம் கலந்து பேசாமல் மக்களை பாதிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். கூட்டணியில் பாமக இருக்க வேண்டுமா என்பதை அதிமுக தான் முடிவு செய்ய வேண்டும். இப்போராட்டம் ஒரு நாடகம் போல் தான் தெரிகிறது. மக்களை பாதிக்கும் வகையில் பாமக போராட்டம் நடத்துவது சரியா என்பதையும் கூட்டணி கட்சியான அதிமுக தலைமை தான் தெரிவிக்க வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in