வேளாண் சட்டத்தால் மாற்றம் வரப்போதில்லை: நல்லசாமி தகவல்

வேளாண் சட்டத்தால் மாற்றம் வரப்போதில்லை: நல்லசாமி தகவல்
Updated on
1 min read

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்பதில்லை. இந்த போராட்டத்தால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு லாபமும் இல்லை. அதேவேளையில் புதிய வேளாண் சட்டத்தால் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை.

இந்த போராட்டத்தில் உள்நோக்கம் இருக்கிறது. வேளாண் விளை பொருட்களுக்கு சரியான விலை இல்லை. இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். இதன்மூலம் பல விவசாயிகள் கடனாளியாகி வருகின்றனர். விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை, இனி வரும் காலங்களில் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது, இவ்வாறு நாமக்கல்லில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in