பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் மறியல்; 17 பேர் கைது

பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் மறியல்; 17 பேர் கைது
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த நவ.27-ம்தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், இந்தியன்ஓவர்சீஸ் வங்கி எதிரில் மறியலில் ஈடுபட்டனர்.

இதில், கட்சியின் மாவட்டசெயலர் எஸ்.கோபால், கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், பி.ரவி, என். கங்காதரன், கே.ரமா, ஊத்துக்கோட்டை வட்டச் செயலர் ஏ.ஜி. கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 17 பேரை பெரியபாளையம் போலீஸார் கைதுசெய்து, மாலையில் விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in