திருவள்ளூர் மாவட்டத்தில் 33 மையங்களில் இலவச எச்ஐவி பரிசோதனை

திருவள்ளூர் மாவட்டத்தில் 33 மையங்களில்  இலவச எச்ஐவி பரிசோதனை
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் 33 நம்பிக்கை மையங்களில் எச்ஐவி பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், 33-வது உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தெரிவித்ததாவது: மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களில் இயங்கும் 33 நம்பிக்கை மையங்களில்எச்ஐவி பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in