

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள், மின்சார ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்றுகடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட் டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஆறு முகம் தலைமை தாங்கினார். தலைமை தபால் நிலையத்தின் உள்ளே நுழைய முற்பட்ட போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போலீஸார், தங்கள் தரப்பில் 10 பேர் லேசான காயமடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 60 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல்,நெய்வேலி மெயின் பஜார் காமராஜ் சிலை அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்