சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை
Updated on
1 min read

சிறுமியை பலாத்காரம் செய் தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் கந்தசாமி(43). இவர் முது குளத்தூர் அருகேயுள்ள எம்.சாலைகிராமத்துக்குச் 26.8.18 அன்று சென்றார். அப்போது 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். கமுதி அனைத்து மகளிர் போலீஸார் கந்தசாமியைக் கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், கந்தசாமிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை, ரூ.3,000 அபராதம் விதித்து நீதிபதி சுபத்ரா நேற்று தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in