ஆன்லைனில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளை புதிய வாக்காளர் பட்டியலில் இணைக்க கூடுதல் முயற்சி தேவை ஆய்வுக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்

ஆன்லைனில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளை  புதிய வாக்காளர் பட்டியலில் இணைக்க கூடுதல் முயற்சி தேவை ஆய்வுக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக் காளர் பட்டியல் திருத்தும் பணிக் காண ஆய்வுக்கூட்டம், தேர்தல் பார்வையாளர் ஆப்ரகாம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அலுவலர்கள், அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகி கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது, தற்போது நீக்கல் அதிகம் உள்ளதாகவும் அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தற் போது கல்லூரிகள் திறக்காத நிலையில், ஆன்லைனில் படிக்கும் மாணவ, மாணவியரை புதிய வாக்காளர்களாக இணைக்க, கல்லூரி நிர்வாகம் மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

தேர்தல் பார்வையாளர் ஆபிரகாம் கூறுகையில், இது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in