சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் வனச்சரகர், அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் வனச்சரகர், அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவு
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் வனச்சரகர் மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இருவரது சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மேட்டூர் வனச்சரகராக பணிபுரிந்து வந்தார்.

சொத்து குவிப்பு

விசாரணையில், மோகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.26.79 லட்சம் மதிப்பிலான நிலத்தை அவரது மனைவி சித்ராமணி பெயரில் வாங்கி யிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

வங்கி டெபாசிட்

மேலும், இருவர் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்துள்ள ரூ.1,06,950 வட்டியுடனும், சேலம் மெய்யனூரில் உள்ள 2,400 சதுரஅடி வீட்டு மனை, ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள 1,045 சதுர அடி வீட்டு மனை, சேலம் போடிநாயக்கன்பட்டியில் உள்ள 3,600 சதுரஅடி வீட்டு மனை ஆகியவற்றை அரசுடைமையாக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in