சமையலர், துப்புரவாளர் பணிக்குவிண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சமையலர், துப்புரவாளர் பணிக்குவிண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின்கீழ் இயங்கும், ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகளில் காலியாக உள்ள 11 சமையலர் பணியிடங்கள், 4 துப்புரவாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமையலர் பணிக்கு ஊதியம் ரூ.15,700-ம், துப்புரவாளர் பணிக்கு ஊதியம் ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ‘நிவர்’ புயல் காரணமாக டிச.7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in